Sunday, May 15, 2011

வாழ்த்துகின்றோம்

நமது  வேலூர் கோட்டப் பகுதியிலிருந்து  இரண்டு  மார்க்சிஸ்ட் கட்சித்
தோழர்கள்  தமிழக சட்டமன்றத்திற்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம்  தொகுதியில்  தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் மாநிலத் தலைவர்  தோழர் கே.பாலகிருஷ்ணன்  வெற்றி பெற்றுள்ளார்.  கடலூர் மாவட்டத்தில்  பல இயக்கங்களில்  நமக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.  2001 ம்  ஆண்டு  கடலூரில்  நடைபெற்ற  கோட்ட மாநாட்டில் சிறப்புரையாற்றியுள்ளார். வேலூர் கோட்ட  அலுவலகத்தில்  நடைபெற்ற  ஒரு சிறப்புக்கூட்டத்திலும்  பேசியுள்ளார்.


அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில செயல் தலைவரான  தோழர் ஆர். ராமமூர்த்தி  விக்கிரவாண்டி தொகுதியில்
வெற்றி பெற்றுள்ளார். 2008 ம் ஆண்டு விழுப்புரத்தில்  நடைபெற்ற
கோட்ட மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக  மாநாட்டை
வெற்றிகரமாக நடத்த வழிகாட்டியவர்.  கடந்தாண்டு வேலூரில்
நடைபெற்ற  மகளிர் தின சிறப்புக் கருத்தரங்கில்  பெண்களுக்கான
சட்ட உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

உழைக்கும் மக்களின் குரலை இவ்விரு தோழர்களும் தமிழக
சட்டப்பேரவையில்  உறுதியாக ஒலிப்பார்கள்!

தோழர்கள் கேபி மற்றும் ஆர்ஆர் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்

1 comment: