Monday, June 6, 2011

வெற்றியை நோக்கி



சார் பணியாளர் தேர்விற்கான
மாதிரி வினாத்தாள்  1

1 ) பத்து வரிகளுக்கு மிகாமல் கீழ்க்காணும்  தலைப்புக்கள் ஏதேனும் ஒன்று பற்றி கட்டுரை எழுதுக.

பொங்கல் பண்டிகை
இந்திய சுதந்திரப் போராட்டம்
எல்.ஐ.சி நிறுவனத்தின்  சாதனைகள்
உங்கள் ஊருக்கு அருகாமையில்  உள்ள சுற்றுலா தளம்
நான் விரும்பும்  தலைவர்.

2 )  கடிதம்  அல்லது மனு எழுதுதல்

நீங்கள் சமீபத்தில் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம்.
பள்ளிச்சான்றிதழ்  கேட்டு  தலைமையாசிரியருக்கு கடிதம்
தெரு  விளக்கு எரியவில்லை  என்று நகராட்சிக்கு கடிதம்

(கடிதத்தின்  அமைப்பு  எப்படி  உள்ளது  என்பதும்  முக்கியமாக
பார்க்க முடியும்)

3 ) பின் வரும் பத்தியை  கவனமாக படிக்கவும்

முருகன் வேகமாக சாலையை கடக்கும் போது  குறுக்கே  வந்த சைக்கிள் அவன் மீது மோதியது. சைக்கிளில் வந்த கந்தனும்
முருகனும் கீழே  விழுந்தார்கள்.  வீதியோரம் போய்க் கொண்டிருந்த
அப்துல்லா  இருவரையும் தூக்கி விட்டான். அங்கே மளிகைக் கடை
வைத்திருந்த ராஜன் சாலையில் செல்லும்போது கவனமாக
இருக்ககூடாதா என்று கடிந்து கொண்டார்.

கேள்விகள்

முருகன் என்ன செய்தான்?

சைக்கிளில் வந்தது யார்?

இவர்களுக்கு இடையே என்ன நடந்தது?

உதவி செய்தது யார்?

ராஜன் என்ன செய்கிறார்?

அவர்  என்ன கூறினார்?

4 )   எல்.ஐ.சி யின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்த கேள்விகள்

உங்கள் கோட்டத்தில்  எத்தனை கிளைகள் உள்ளது?
உங்கள் மண்டலத்தில்  எத்தனை கோட்டங்கள்  உள்ளது?
உங்கள் மாநிலத்தில்  எத்தனை கோட்டங்கள் உள்ளது?
உங்கள் கோட்டத்தின்  தலைமையகம் எங்கே உள்ளது?
உங்களின் கோட்ட  மேலாளர் பெயர் என்ன?
எல்.ஐ.சி புதிதாய் அறிமுகம் செய்துள்ள பாலிசியின் பெயர் என்ன?
யூலிப்  திட்டம்  என்றால் என்ன?

5 )  கீழ்க்கண்ட பாலிசி எண்களை  ஏறு வரிசையில் அமைத்திடு

779834568     568412084    874560871    779312094   778643218

965735198    773994021    776882134     679235480   976768219


6 )   பொது அறிவுக் கேள்விகள்

இந்தியாவின்  சுதந்திர தினம்
இந்தியாவின் குடியரசு தினம்
எல்.ஐ.சி உருவான நாள்
மகாத்மா காந்தி பிறந்த நாள்
இந்தியாவின்  மிக இளைய பிரதமர்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
எல்.ஐ.சி தோன்றும் முன் எத்தனை தனியார் கம்பெனிகள்
இருந்தன?
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை  எத்தனை முறை
வென்றுள்ளது?
இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன?
கடைசியாக நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை
பதக்கங்களை  வென்றுள்ளது?

7 )  கணிதம்

பாலிசிதாரருக்கு அனுப்ப வேண்டிய ஒரு கடிதத்திற்கு எட்டு ரூபாய்
மதிப்பில் தபால் வில்லை ஓட்ட வேண்டும்.  90  கடிதங்கள் அனுப்ப
வேண்டும் என்றால்  மொத்தம் எத்தனை ரூபாய்க்கு தபால் வில்லைகள்   வாங்க வேண்டும்?

ஒரு பாலிசிதாரர்  தான் வாங்கிய கடன் தொகை, வட்டி, பிரிமியம் 
ஆகியவற்றை  செலுத்த அலுவலகம்  வருகின்றார்.  கடன் ரூபாய் 6 ,000  
வட்டி 752  ரூபாய். பிரிமியம் ரூபாய் 1245 . என்றால்  அவர்  மொத்தமாக
எவ்வளவு ரூபாய் செலுத்துவார்? 

கையெழுத்து  சிறப்பாக இருந்தால்  அதற்கு கூடுதலாக ஐந்து மதிப்பெண் 
தரப்படும் என்பதை  கவனத்தில் கொண்டு பயிற்சி  செய்யவும். 

வாழ்த்துக்களுடன்

காப்பீட்டுக் கழக  ஊழியர்  சங்கம், 
வேலூர் கோட்டம். 


இதற்கான பதில்கள்  நாளை  வெளியிடப்படும் 










No comments: